ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் ரூ.1.82 கோடி உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12செப் 2024 10:09
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ. 1.82 கோடி வருவாய் கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 30 நாள்களுக்கு பின்பு சுவாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி முன்புள்ள உண்டியல்களை கோயில் இணை ஆணையர் சிவராம்குமார் முன்னிலையில் திறக்கப்பட்டு காணிக்கைகளை கோயில் ஊழியர்கள் சேகரித்தனர். இதனை கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் ஊழியர்கள், சிவனடியார்கள் குழுவினர் எண்ணினார்கள். இதில் ரொக்க பணம் ரூ.1 கோடியே 82 லட்சத்தி, 98 ஆயிரத்தி, 792 ரூபாயும், தங்கம் 88 கிராம், வெள்ளி 7 கிலோ 750 கிராம் காணிக்கையாக கிடைத்தது.