Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யோக நரசிங்க பெருமாள் கோயிலில் ... பெருமாள் கோயில்களில் ஏகாதசி சிறப்பு பூஜை பெருமாள் கோயில்களில் ஏகாதசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளத்தில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பெரியகுளத்தில் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் உற்சவம்

பதிவு செய்த நாள்

14 செப்
2024
04:09

பெரியகுளம்; பெரியகுளம் வணிக வைசியகுல சங்கத்தில் நடந்த பிட்டு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

பெரியகுளம் தென்கரை வணிக வைசியகுல அபிவிருத்தி சங்கத்தில் 44 வது ஆண்டு பிட்டு திருவிழாவை முன்னிட்டு, பாலசுப்பிரமணியர் கோயிலில் இருந்து உற்ஸவர்கள் சொக்கநாதர் பிரியாவிடை அம்மன், மீனாட்சியம்மன், சண்டிகேஸ்வரர், விநாயகர் வணிகவைசிய குல சங்கத்தில் எழுந்தருளினர். அர்ச்சகர் துரைக்கண்ணன் பேசுகையில்: வணிகவைசியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் சிவபக்தை வந்திபாட்டி. மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கில் கரை உடைந்தது. பாண்டிய மன்னன் கரையை உயர்த்த ஒவ்வொருவரும் ஒரு பகுதியை உயர்த்த வேண்டும் என உத்தரவிட்டார். வந்திபாட்டிக்கு சிவபெருமான் சிறுவன் வேடத்தில் வேலையாளாக வந்தார். அவரிடம் கூலிக்கு பதிலாக உதிர்ந்த பிட்டினை உண்டார். வைகையாற்று கரையில் வேலை செய்யாமல் ஆட்டம், பாட்டமாக இருந்துள்ளார். இதனை கண்ட பாண்டிய மன்னன், அவரை பிரம்பால் அடித்துள்ளார். உலகத்தில் அனைவருக்கும் பிரம்பு அடி விழுந்தது. மன்னர், சிவபெருமனை வணங்கினார்.இதனை வலியுறுத்தி அர்ச்சகர்கள் பிட்டுக்கு மண் சுமந்த லீலையை நடத்தினர். சுவாமி, அம்மன் அலங்கரிக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் வீதி உலா நடந்தது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு பிட்டு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் கணேசன், அலுவலர் சரவணக்குமார் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar