Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவானியம்மன் கோவிலில் தங்கத்தேர் ... காளஹஸ்தி சிவன் கோயிலில் பவித்ரோற்சவம் துவக்கம்; சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் காளஹஸ்தி சிவன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் திருவோண பூஜைகள் தொடக்கம்; பக்தர்களுக்கு ஓண விருந்து
எழுத்தின் அளவு:
சபரிமலையில் திருவோண பூஜைகள் தொடக்கம்; பக்தர்களுக்கு ஓண விருந்து

பதிவு செய்த நாள்

14 செப்
2024
05:09

சபரிமலை; சபரிமலையில் திருவோண பூஜைகள் தொடங்கியது. இன்று மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி சார்பில் பக்தர்களுக்கு ஓண விருந்து அளிக்கப்பட்டது


திருவோண பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று (13ம் தேதி) மாலை 5:00 க்கு திறக்கப்பட்டது. அன்று பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு 10:00 க்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி பிரம்மதத்தன் ஐயப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்திய பின்னர் நெய்யபிஷேகத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருவோண சிறப்பு பூஜைகள் தொடங்கியது. கேரளாவில் தலை ஓணம் என்று அழைக்கப்படும் உத்திராட ஓணத்தையொட்டி மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி சார்பில் பக்தர்களுக்கு ஓண விருந்து வழங்கப்பட்டது. இதனை திருவிதாங்கூர் தேவசம்போர்டு தலைவர் பி.எஸ். பிரசாந்த் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். நாளை திருவோணம் நாளில் திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் சார்பில் பக்தர்களுக்கு ஓணவிருந்து வழங்கப்படுகிறது. நாளை மறுதினம் போலீஸ் துறை சார்பில் ஓண விருந்து வழங்கப்படும். அத்தப் பூக்களம் அமைக்கப்பட்டிருந்தது. ஐயப்பன் விக்ரகத்தில் மஞ்சள் நிற வஸ்திரம் அணிவித்து பூஜைகள் நடைபெறுகிறது. திருவோண பூஜைகளுக்கு பின்னர் தொடர்ந்து புரட்டாசி மாத பூஜைகளும் நடைபெற்று 22ம் தேதி இரவு நடை அடைக்கப்படும். சபரிமலையில் பக்தர்களின் சார்பில் களபாபிஷேக வழிபாடு நடைபெறுகிறது. இதற்கான அரைத்த சந்தனம் வெளியில் இருந்து கொண்டுவரப்பட்டு வந்தது. தற்போது தேவசம்போர்டு சார்பில் சந்தனம் அரைக்கும் இயந்திரம் சபரிமலை நிறுவப்பட்டுள்ளது. இதனை தேவசம்போர்டு தலைவர்பிரசாந்த் தொடங்கி வைத்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோவிலில், டிசம்பரில் நடக்கும் சேவைகளுக்கான முன்பதிவு தேதி ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar