மானாமதுரை; மானாமதுரை அருகே மேலபசலை சிவன் கோயிலில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் 108 மூலிகை அபிஷேகம் நடைபெற்றது. இங்கு மண்ணில் புதைந்திருந்த சிவன் சிலையை மீட்டு சிவனடியார்கள் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து வெளியே எடுத்து மேலப்பசலை கிராமத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இங்கு திருவாசகம் முற்றோதல் மற்றும் பல்வேறு பூஜைகளும் தினம்தோறும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இங்குள்ள சிவனுக்கு பழமலை நாதர் என்றும் அம்மனுக்கு பெரியநாயகி என்றும் பெயரிட்டு வழிபாடு செய்து வருகின்றனர். நேற்று இக்கோயிலில் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் 108 மூலிகை அபிஷேகம் நடந்தது. மதுரை ஆலவாயர் அருட்பணி மன்ற நிர்வாகி சிவாஜி சிவனடியார் தலைமை வகித்தார்.