திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, பூர்வாங்க பணி தொடங்க இன்று காலை முகூர்த்த பந்தக் கால் நடப்பட்டது;
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வரும் டிசம்பர் 13ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளது. விழாவில் பூர்வாங்க பணி தொடங்க இன்று காலை கோவில் ராஜகோபுரம் முன் முகூர்த்த பந்தக் கால் நடப்பட்டு சிவாச்சாரியார் சிறப்பு தீபாரணை செய்து வழிப்பட்டனர். ராஜகோபுரம் முன் நடப்பட்ட முகூர்த்த பந்தக்காலை ஏராளமான பக்தர்கள் வலம் வந்து வழிபட்டனர். விழாவில் தோரணங்கள் வாழ பந்தலுடன் கம்பீரமாக காட்சியளித்தது ராஜகோபுரம்.