பதிவு செய்த நாள்
23
செப்
2024
11:09
திருப்பூர்; திருப்பூர் ஓம் சக்தி கோயிலில் நடந்த ஆடிப்பூர விழாவில், தி.மு.க.,வைச் சேர்ந்த எம்.எல்.ஏ., மற்றும் மேயர், கருவறைக்குள் சென்று சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.
திருப்பூரில் உள்ள, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் ஆடிப்பூர பெருவிழா நேற்று நடந்தது. விழாவில், கஞ்சிக்கலய ஊர்வலத்தை தொடர்ந்து பொதுமக்கள் கருவறைக்குள் சென்று, ஆதிபராசக்திக்கு பாலாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. கோயிலில் வழிபாடு நடத்திய தி.மு.க.,வைச் சேர்ந்த, திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், இந்திய கம்யூ.,வைச் சேர்ந்த துணை மேயர் பாலசுப்பிரமணியம் உட்பட பலர் பாலாபிஷேகம் செய்தனர். சட்டை அணியாமல் கருவறைக்குள் சென்ற அவர்கள், சிறிய குடங்களில் எடுத்துவந்த பாலில், பராசக்திக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.