பதிவு செய்த நாள்
26
செப்
2024
10:09
மதுரை; மீனாட்சி அம்மன் கோவிலில் தற்போது பக்தர்களுக்கு இலவசமாக லட்டு வழங்கப்படுகிறது. தவிர புளியோதரை, முறுக்கு, அப்பம், புட்டு போன்ற பிரசாதங்கள் விற்கப்படுகின்றன.
இவை கோவிலின் ஒரு பகுதியில் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேநேரம் அம்மன், சுவாமிக்கு படைக்கப்படும் உணவுகள், பாரம்பரிய முறைப்படி அம்மன் சன்னதி எதிரேயுள்ள மடப்பள்ளியில் தயாரிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் அழகர்கோவில் கள்ளழகர் கோவிலுக்கு அறநிலையத்துறை கமிஷனர் ஸ்ரீதர் ‘விசிட்’ செய்தார். அங்கு பிரசாதம் தயாரிக்க அமைக்கப்பட்டுள்ள நவீன சமையல் கூடத்தை ஆய்வு செய்தவர், இதேபோல் மற்ற கோவில்களிலும் அமைக்க அறிவுறுத்தினார். முதற்கட்டமாக, மீனாட்சி அம்மன் கோவிலில் உணவு பாதுகாப்புத்துறை விதிகள்படி, நவீன சமையல்கூடம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதேநேரம், நவீன சமையல் கூட பணியாளர்களுக்கு அங்கேயே கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட வேண்டும். ஆனால், மீனாட்சி அம்மன் கோவிலில் அதற்கான வாய்ப்பு இல்லாததால், சமையல் கூடம் மட்டும் அமைத்துவிட்டு, மேற்கு சித்திரை வீதியில் உள்ள கோவில் தங்கும் விடுதியில் உள்ள கழிப்பறையை பணியாளர்கள் பயன்படுத்த உள்ளனர்.