பதிவு செய்த நாள்
27
செப்
2024
11:09
திற்பரப்பு; அம்பாங்காலை ஆலுமூடு அம்மன் கோவில் வருடாந்திர திருவிழா இன்று (27ம் தேதி) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. திருவரம்பு அருகே அம் பாங்காலை ஆலுமூடு அம்மன் கோவில் வருடாந்திர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) துவங்கியது. காலை 5.30 மணிக்கு கணபதி ஹோமத்தை தொடர்ந்து 6.30க்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது. காலை சிறப்பு பூஜை களுக்கு பின் 8.30க்கு அபிஷேக குப்பம் நிறைத்தல், 10 மணிக்கு அம்மனுக்கு கலச அபிஷேகம், தொடர்ந்து தம்புரானுக்கு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம், மாலை 5 மணிக்கு பஜனை, 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு அலங்கார தீபாராதனை, 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. நாளை 2ம் நாள் காலை 8 மணிக்கு சுமங்கலி பூஜை, 10.30க்கு தீபாராதனை, பகல் 11.30க்கு நாகரூட்டு, மதியம் 1 மணிக்கு அன்னதானம், மாலை 5.30க்கு பஜனை, இரவு 7 மணிக்கு வில் லிசை, 8 மணிக்கு தம்புரா னுக்கு படையல், 8.30க்கு தீச்சட்டி எடுத்தல் நடக்கிறது. விழா நிறைவு நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு சிறப்பு பூஜை, 8 மணிக்கு வில்லிசை, 10 மணிக்கு பொங்கலுக்கு தீ மூட்டுதல், மதியம் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு 12.30க்கு பூப்படை, 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. எட்டாம் கொடை விழா அக்.,6ம் தேதி நடக்கிறது. அன்று காலை 6 மணிக்கு கண பதி ஹோமம், 10.30க்கு சிறப்பு பூஜை, மதியம் 12 மணிக்கு மஞ்சள் நீராட்டு, 1 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பக்தர்கள் ஒத்துழைப்போடு கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.