Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கார்த்திகை தீப திருவிழா: ... சபரிமலை சிறப்பு தரிசன முன்பதிவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சமயபுரத்துக்கு பாதயாத்திரை 9,000 பேர் மாலையணிவிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 நவ
2012
11:11

கும்பகோணம்: சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாத யாத்திரை செல்ல, கும்பகோணத்தில் ஒரே நாளில், 9 ஆயிரம் பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், கும்பகோணம் பகுதியிலிருந்து, ஆயிரக்கணக்கானோர் மாலை அணிந்து, பாத யாத்திரையாக சென்று வழிபடுகின்றனர். அந்த வகையில் உலக நன்மைக்காக, 20ம் ஆண்டு பாதயாத்திரையை, திருவலஞ்சுழி கோபாலகிருஷ்ண சுவாமிகள் தலைமையில் பக்தர்கள் செல்கின்றனர். இதையொட்டி, நேற்று முன்தினம் மஞ்சள் உடை அணிந்து மாலை அணிந்து கொண்டனர். அதற்கு முன்தினம் இரவு சமயபுரம் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. கும்பகோணம், பந்தநல்லூர், திருவிடைமருதூர், பாபநாசம், சுவாமிமலை, வலங்கைமான், குடவாசல், நன்னிலம் பகுதிகளைச் சேர்ந்த, 9 ஆயிரம் பக்தர்கள் திருவலஞ்சுழி சென்று, கோபாலகிருஷ்ண சுவாமிகளிடம் மாலை அணிந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் வரும் டிச., 20ம் தேதி வரை விரதம் இருந்து, சமயபுரம் பாத யாத்திரையாக செல்ல உள்ளனர். தினமும் திருவலஞ்சுழி சமயபுரம் மாரியம்மனுக்கு மஞ்சள் அலங்காரம், லட்சுமி, சரஸ்வதி, காமாட்சி, மகிஷாசுர மர்த்தினி, அன்னபூரணி, ராஜராஜேஸ்வரி போன்ற பலவித அம்மன் அலங்காரமும், குங்குமம், விபூதி, மலர், காசுகள், காய்கறி அலங்காரம் நடக்கிறது. இதுகுறித்து கோபாலகிருஷ்ண சுவாமிகள் கூறுகையில், ""கடந்த ஆண்டு கும்பகோணத்திலிருந்து, 25 ஆயிரம் பக்தர்கள் சமயபுரத்திற்கு பாத யாத்திரையாக சென்றனர். இந்த ஆண்டு, 30 ஆயிரம் பேர் வரை செல்ல உள்ளனர். வரும், 25ம் தேதி வரை பக்தர்களுக்கு மாலை அணிவிக்கப்படும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் குஜராத் சோமநாதர் ஜோதிர்லிங்கத்திற்கு வாழும் கலை ... மேலும்
 
temple news
 நெல்லிக்குப்பம்: வேணுகோபால சுவாமிக்கு நடந்த தைல காப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
 கடலுார்: இலங்கையை சேர்ந்த தமிழர்கள், 96 பேர் இந்தியாவில் முழுவதும் உள்ள ஆன்மீக வழிபாட்டுத் தலங்களை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், சோழர் கால விஷ்ணு கற்சிலையை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டெடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar