பெரியகுளம்; பெரியகுளம் வரதராஜப்பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை இரண்டாம் வாரத்தை முன்னிட்டு சுப்ரபாதத்துடன் வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு பூஜை துவங்கியது. மூலவர் திருவேங்கடமுடையான் (திருப்பதி) அலங்காரத்தில், நெற்றியில் பச்சை கற்பூரம், கஸ்தூரி திலகம் சாற்றிக்கொண்டு திவ்ய அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோயில் முழுவதும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை நீண்ட வரிசையில் கோவிந்தா, கோவிந்தா கோஷத்துடன் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். உற்ஸவர் வரதராஜப் பெருமாள் அனுமந்த வாகனத்தில், ராமர் அலங்காரத்தில் காட்சியளித்தார். பிரசாதம் வழங்கப்பட்டது. தென்கரை கோபாலகிருஷ்ணன் கோயிலில் குழந்தை வடிவிலான கிருஷ்ணர் மலர் அலங்காரத்தில் பத்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வடகரை கோதண்ட ராமர் கோயிலில் ராமர்,சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரியகுளம் பாம்பாற்று ராம பக்த ஆஞ்சநேயர் கோயிலில் ஆஞ்சநேயர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். பெரியகுளம் நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர், ராதை மலர்கள் அலங்காரத்தில் காட்சியளித்தனர். கூட்டு பிரார்த்தனை நடந்தது. பிரசாதம் வழங்கப்பட்டது. தாமரைக்குளம் மலைமேல் வெங்கடாசலபதி கோவிலில் உற்சவர் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். லட்சுமிபுரம் லட்சுமி நாராயணாப்பெருமாள் மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர் பிரசாதம் வழங்கப்பட்டது.