சோமவாரம், சிவராத்திரி; கைலாசநாதர் கோவிலில் சிவனுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2024 10:09
கோவை; கோவை ஆர். எஸ். புரம் சொக்கம்புதூர் ரோடு ஸ்ரீ கிருஷ்ணாபுரம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் புரட்டாசி மாதம் இரண்டாவது சோமவார திங்கட்கிழமை மற்றும் மாத சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. கோவிலில் அமைந்துள்ள கைலாசநாதர் சன்னதியில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் வெண்பட்டு வஸ்திரத்துடன் ருத்ராட்ச மாலை அணிந்து பக்தர்களுக்கு சிவபெருமான் காட்சியளித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சிவ தரிசனம் செய்தனர்.