எரியோடு அய்யனார் கோயிலில் கொழுக்கட்டை சூறை வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03அக் 2024 11:10
எரியோடு; எரியோடு இ.சித்துார் நல்லமநாயக்கன்பட்டியில் ஊருக்கு வெளியே இருக்கும் அய்யனார் கோயிலில் புரட்டாசி 3ம் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு மழை வேண்டியும் கிராம மக்கள் செழிப்புடன் வாழவும் கொழுக்கட்டைகளை சூறைவிட்டு நேர்த்திக்கடன் வழிபாடு நடந்தது. நேற்றுமுன்தினம் மாலை நடந்த வழிபாட்டிற்கு ஏராளமான பெண்கள் தங்கள் வீடுகளில் கொழுக்கட்டைகள் செய்து வந்து கோயிலில் ஒப்படைத்தனர். அய்யனாருக்கு படையலிட்டு அபிஷேகங்கள் நடந்தபின் ஊர் தலைவர் செவந்தியப்பன் படையல் செய்யப்பட்ட கொழுக்கட்டைகளை எடுத்து சூறைவிட்டார். கூடி நின்ற ஆண்கள் அனைவரும் போட்டியிட்டு கொழுக்கட்டைகளை கீழே விழாமல் பிடித்தனர்.