மயிலாடுதுறை அண்ணன்பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08அக் 2024 10:10
மயிலாடுதுறை; திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் இன்று மாலை நடந்த கருட சேவை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெல்லக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், குமுதவல்லி நாச்சியார் அவதார ஸ்தலமாகவும் திகழ்கிறது. இத்தளத்தில் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். இங்கு பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் எனவும் குழந்தைகள் ஞானம் பெறுவர் எனவும் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது திரளான பக்தர்கள் பெருமாளை சேவித்தனர். இரவு பெருமாள் வீதி உலா காட்சி நடைபெற்றது. வரும் 10ம் தேதி இரவு திருக்கல்யாணமும், 12ஆம் தேதி தேர், தீர்த்த வாரியும், 13ஆம் தேதி கொடி இறக்கமும், 14ஆம் தேதி இரவு தெப்ப உற்சவமும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கணேஷ் குமார் தலைமையிலானூர் செய்துள்ளனர்.