பதிவு செய்த நாள்
08
அக்
2024
11:10
மதுரை; கருணைக்கடல் காஞ்சி மகா பெரியவா ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள். கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறவர். பாரததேசம் முழுதும் புண்ணிய யாத்திரைகள் மேற்கொண்டு முகாமிட்டு அருளாசிகளை வழங்கியவர். மீனாட்சி சொக்கநாதர் கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்ட பல வைபவங்களுக்காக மதுரைக்கு பலமுறை விஜயம் புரிந்துள்ளார். அவருக்கு மதுரையின் புண்ணிய திருத்தலமான வ்ருஷபாத்ரி எனப்படும் திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோயில் மலை அடிவாரத்தில், திருக்கோயிலை அமைக்க இருக்கிறது மதுரை அனுஷத்தின் அனுக்கிரகம். கள்ளழகர் திருக்கோயிலின் தீர்த்தக்குளம் அமைந்திருக்கக் கூடிய பொய்கைக்கரைப் பட்டியில், இயற்கை எழில் சூழ பொலிவுற அமையவிருக்கிறது இந்தக் கோயில். இதற்கான பூர்வாங்க பணிகள் வெகு விரைவாக தொடங்கப்பட இருக்கின்றன.
மதுரை எஸ்.எஸ்.காலனியில், ஸ்ரீகாஞ்சி மகாபெரியவா கிருஹம் என்னும் கோயிலை நிர்வகித்து நடத்திவரும் அனுஷத்தின் அனுக்கிரகம் நிறுவனரின் சீரிய முயற்சியில் இந்தக் கோயில் அமையவிருக்கிறது. இந்தப் புனிதத் திருப்பணியில் ஆன்மிக அன்பர்களும், ஸ்ரீ காஞ்சி மகாபெரியவரின் பக்தர்களும் பங்குபெறலாம். திருப்பணிக்குத் தேவையான நிதி, கட்டிட தளவாட சாமான்கள், இதர பொருட்களாக வாங்கிக் கொடுத்தும் திருப்பணியில் பங்கெடுக்கலாம். அடுத்த ஓராண்டுக்குள் இந்தக் கோயில் கட்டுமானம் பூர்த்தி பெற்று ஸ்ரீஸ்ரீ காஞ்சி மகா பெரியவா சந்திரசேகரேந்திர ஸ்வாமிகளின் அருள் ஆசியோடு கும்பாபிஷேகம் செய்யப்பட இருக்கிறது.
தொடர்புக்கு; நெல்லை பாலு, அனுஷத்தின் அனுக்கிரகம், G-102, சாந்தி சதன் குடியிருப்பு, கோச்சடை, மதுரை - 625016. போன்; +91 9442630815.