பதிவு செய்த நாள்
08
அக்
2024
12:10
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஐப்பசி மாத திருவிழா அக்.,28ல் துவங்குகிறது.
ஐப்பசி பூரம் தினமான அன்று காலை 10:00 மணிக்கு மூலவர் மீனாட்சி அம்மனுக்கும், உற்ஸவர் அம்பாளுக்கும் ஏத்தி இறக்கும் சடங்குகள், தீபாராதனை நடக்கும். அக்., 31 தீபாவளி அன்று காலை மாலையில் அம்மனுக்கு வைர கிரீடம், தங்க கவசம் அணிவித்தும், சொக்கநாதருக்கு வைர நெற்றிப்பட்டை சாத்தப்பட்டும் தீபாவளி சிறப்பு தரிசனம் நடைபெறும். கோலாட்டம்: நவ., 2 முதல் 7 வரை கோலாட்ட உற்ஸவம் நடக்கிறது. தினமும் மாலை 6:00 மணிக்கு அம்மன் ஆடி வீதியில் வலம் வந்து மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் பத்தியுலாத்தியபின் கொலுச்சாவடி சேத்தியாவார். நவ., 6 மாலை 6:00 மணிக்கு அம்மன் வெள்ளி கோரதத்தில் எழுந்தருளி நான்கு சித்திரை வீதிகளிலும், மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்சமூர்த்திகளுடன் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளி ஆடி வீதிகளிலும் உலா வருவர். கந்த சஷ்டி: நவ.,2 முதல் 7 வரை கந்த சஷ்டி விழா நடக்கிறது. நவ.,8 காலை 7:00 மணிக்கு கூடல்குமாரர் சன்னதியில் முத்துக்குமார சுவாமி எழுந்தருள்வார். அவருக்கு வெள்ளிக் கவசம், பாவாடை சாத்துப்படி, விசேஷ அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை நடைபெறும். நவ., 11 முதல் 15 வரை திருபவித்திர உற்ஸவம் நடைபெறும். சந்திரசேகரர், சுவாமி சன்னதி 2ம் பிரகாரம் வலம் வந்து சேத்தியாவார். நவ., 15 உச்சிக்காலத்தில் சொக்கலிங்க பெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.