Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவை: கோவை மண்டலத்தில் ... வெள்ளி கற்பக விருஷவாகனத்தில் ஸ்வாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவ,வைணவ தலங்கள் இணைத்து திருச்செந்தூருக்கு ரயில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 நவ
2012
10:11

சிவகாசி: சிவ, வைணவ தலங்கள் இணைத்து, பழனி,மதுரை சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், தென்காசி மார்க்கமாக, திருச்செந்தூருக்கு ரயில்இயக்க மக்கள் எதிர்பார்க்கின்றனர்.மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் தொழில் நகரங்களாக உள்ளன. விருதுநகர் செங்கோட்டை மீட்டர் கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றியதால், கூடுதல் ரயில் போக்குவரத்து இருக்கும், தொழில்கள் மேம்படும் என்ற கனவில் மக்கள் இருந்தனர். ஆனால், அகல பாதை பயன்பாட்டிற்கு வந்து, ஆண்டுகள் பல ஆகியும், இந்த வழித்தடத்தில் ஓடிய ரயில்கள் நிறுத்தப்பட்டதுதான் அதிகமாக உள்ளது. செங்கோட்டை சென்னை ரயில், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சாவூர், விழுப்புரம் வழியாக தினம் நீண்டதூர ரயிலாக இயக்கியது. நாகூர் - கொல்லம் எக்ஸ்பிரஸ் செங்கோட்டை, சிவகாசி விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர் வழியாக, நாகூர் வரை தினசரி இயக்கப்பட்டது.

கொல்லம் கோவை ரயில், செங்கோட்டை, தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், பழனி வழியாக ,கோயம்புத்தூருக்கு இயக்கப்பட்டது, இரவில் இயக்கப்பட்ட இந்த ரயில்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டன. அகல ரயில்பாதை பணி முடிந்தது, சென்னை - செங்கோட்டைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ், மதுரை செங்கோட்டை ரயில்கள் மட்டுமே தினமும் இயக்கப்படுகின்றன. செங்கோட்டையில் இருந்து சிவகாசி, விருதுநகர் மார்க்கமாக மதுரைக்கு அதிகாலையில் இணைப்பு ரயில் விட வேண்டும். இந்த ரயில் மதுரையில் இருந்து காலை 6.30மணிக்கு கிளம்பும் வைகை எக்ஸ்பிரஸ்க்கு இணைப்பாக இயக்க வேண்டும். மறு மார்க்கத்தில் மதுரையில் இருந்து செங்கோட்டை வரை ரயில் இயக்கிட வேண்டும். திருநெல்வேலி முதல் திருச்சி வரை புதிதாக இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இதற்கு இணைப்பாக செங்கோட்டை விருதுநகர் வரை, இணைப்பு ரயில் விட்டால் வியாபாரிகளுக்கு பயனுள்ளதாககும். திண்டுக்கல் பழநி இடையே ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து விருதுநகர், சிவகாசி, தென்காசி, திருநெல்வேலி மார்க்கமாக, திருச்செந்தூருக்கு இயக்க வேண்டும். இவ்வாறு இயக்கினால், அறுபடை வீட்டில் இருபடை வீடான பழநியும், திருச்செந்தூரும் இணைக்கப்படும். மேலும் இவ் வழித்தடத்தில், சைவ தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலும், சிவதலமான சங்கரன்கோயில் உள்ளன. திருச்செந்தூருக்கு இயக்கப்பட இருக்கும் ரயிலை, விருதுநகர், தென்காசி மார்க்கமாக இயங்கினால், பக்தர்கள் பலன் அடைவார்கள். ஐய்யப்பன் கோயில் சீசன் துவங்கியதால், பக்தர்கள் பலரும் செங்கோட்டையில் இருந்து பம்பை செல்ல உதவியாக இருக்கும் என, பொதுமக்கள் விரும்புகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
நாகர்கோவில், தக்கலை அருகே நூற்றாண்டு பழமை வாய்ந்த வேளிமலை குமாரசுவாமி கோவிலில் பங்குனி விழாவில் ... மேலும்
 
temple news
மத்தியப் பிரதேசம்: கிருஷ்ண பக்ஷ பஞ்சமியை முன்னிட்டு உஜ்ஜைன் மஹாகாலேஷ்வர் கோயிலில் பஸ்ம ஆரத்தி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வரதராஜ பெருமாள் கோவிலில் பங்குனி மாதத்தில் நடைபெறும் பல்லவ உற்சவம் மிகச் சிறப்பானது. ... மேலும்
 
temple news
அச்சிறுபாக்கம்:-அச்சிறுபாக்கத்தில் உள்ள இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவிலுக்கு செய்யப்பட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar