பதிவு செய்த நாள்
08
அக்
2024
09:10
திருப்பதி: திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில், பிரம்மோற்சவ விழாவின், ஐந்தாம் நாளான இன்று கருட சேவை நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் முக்கியமான கருட சேவை இன்று நடந்தது. ஏழுமலையான் பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று காலை, மலையப்ப சுவாமி, மோகினி அவதாரத்தில் உலா வந்தார். அவருடன், ஸ்ரீகிருஷ்ணரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். பிரம்மோற்சவத்தின் முக்கிய சேவையான கருடசேவை, இரவு, 8:00 மணிக்கு துவங்கியது. கருட வாகனத்தில் வந்த மலையப்ப சுவாமிக்கு, ஏழுமலையான் மூலவருக்கு அணிவிக்கப்படும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 1008 சகஸ்ர காசு மாலை, 108 லட்சுமி உருவம் பதித்த ஆரம், மகர கண்டி ஆகியவை அணிவிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தின் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்து வந்த ஆண்டாள் மாலையும் அணிவிக்கப்பட்டது. கருட சேவையின் போது, சென்னையில் இருந்து வந்த குடைகள் ஊர்வலத்தில் கொண்டு வரப்பட்டது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா.. கோவிந்தா என கோஷத்துடன் தரிசனம் செய்தனர்.