பதிவு செய்த நாள்
09
அக்
2024
10:10
புதுச்சேரி; சாரதாம்பாள் கோவில் நவராத்திரி சிறப்பு பூஜையில் நவக்கிரக மிருத்யுஞ்ஜய ஹோமம் நடந்தது.
புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி நுாறடிச்சாலை சிருங்கேரி சிவகங்கா மடம், சாராதாம்பாள் கோவிலில் பொன்விழா ஆண்டு நவராத்திரி விழா ஹோமங்கள் கடந்த 3ம் தேதி யாகசாலை பிரவேசம், விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து சூக்தஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், தன்வந்திரி, ஆஞ்சநேய ஹோமம், துர்கா சூக்த ஹோமம், காயத்திரி ஹோமங்கள் நடந்தது. நேற்று முன்தினம் மகா ருத்ர ஹோமம், சுயம்வரா பார்வதி ஹோமம், கந்தர்வ ராஜா ஹோமம் நடந்தது. நேற்று காலை சுப்ரமண்ய ஷடாக்ஷரி ஹோமம், நவக்கிரக மிருத்யுஞ்ஜய ஹோமம் நடந்தது. இன்று 9ம் தேதி ஹயக்ரீவ மற்றும் மகா சுதர்சன ஹோமம், நாளை 10ம் தேதி அதிஷ்டானத்தில் ஆராதனையும், 11ம் தேதி மகா சண்டி ஹோமம் நடக்கிறது. விழாவையொட்டி தினசரி நடந்து வரும் இசை, பரத கலை நிகழ்ச்சியில் நேற்று மாலை கீர்த்தி லட்சுமி குழுவினரின் பாட்டு, விஜயாஞ்சலி நடனம் மற்றும் இசை மையத்தின் சார்பில் பரத நிகழ்ச்சி நடந்தது.