அனுப்பர்பாளையம் அரங்கநாத பெருமானுக்கு மகா திருமஞ்சனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2024 11:10
அனுப்பர்பாளையம்; திருப்பூர், அடுத்த அனுப்பர்பாளையத்தில் ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஶ்ரீ அரங்கநாத பெருமாள் திருக்கோவில் உள்ளது. கோவிலில், விஜய தசமி பிரம்மோற்சவம் வைபவ விழா கடந்த மாதம் 6 ம் தேதி முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, நேற்று 20 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 : 00 மணிக்கு மேல் 12 : 00 மணிக்குள் உற்சவர் க்கு விஷேச மகா திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அரங்கநாத பெருமாளை தர்சித்தனர். தொடர்ந்து சாமி ஊர்வலம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஊர் பொது மக்கள் செய்து இருந்தனர்.