ஸ்ரீபெரும்புதுார் சென்ற வீரராகவ பெருமாள் திருவள்ளூர் வந்தடைந்தார்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21அக் 2024 10:10
திருவள்ளூர்; ஸ்ரீவேதாந்த தேசிகன் 756வது சாற்றுமறை உற்சவத்தில் பங்கேற்க, ஸ்ரீபெரும்புதுார் சென்ற வீரராகவ பெருமாள் நேற்று திருவள்ளூர் வந்தடைந்தார். ஸ்ரீபெரும்புதுார் ஸ்ரீவேதாந்த தேசிகன் அவதார மகோற்சவத்தில் சாற்றுமறை நிகழ்ச்சியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க, கடந்த 18ம் தேதி இரவு 9:00 மணிக்கு திருவள்ளூரிலிருந்து வீரராகவ பெருமாள் புறப்பட்டு சென்றார். அப்போது, அவருக்கு மணவாளநகர், மேல்நல்லாத்துார், போளிவாக்கம், செங்காடு, தொடுகாடு என, ஸ்ரீபெரும்புதுார் செல்லும் வழியெங்கும் பக்தர்கள் வரவேற்பு அளித்தனர். நேற்று முன்தினம் ஸ்ரீபெரும்புதுாரில் வீரராகவ பெருமாளுக்கு திருமஞ்சனம் நடந்தது. அன்றிரவு ஸ்ரீபெரும்புதுாரில் முக்கிய வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின், அங்கிருந்து புறப்பட்ட வீரராகவ பெருமாள், நேற்று மதியம் 1:30 மணியளவில் திருவள்ளூர் வந்தடைந்தார்.