பதிவு செய்த நாள்
21
அக்
2024
11:10
வானுார்; இரும்பை மகா காளேஸ்வரர் கோவிலில், சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். விழுப்புரம் மாவட்டம், வானுார் அடுத்த இரும்பை கிராமத்தில் பிரசித்தி பெற்ற மகா காளேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று காலை 11:00 மணிக்கு, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம், தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு இந்து அறநிலையத் துறை சார்பில் மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, மகா காளேஸ்வரர், மதுசுந்தரநாயகி அம்மன் சுவாமிகளை தரிசனம் செய்தார். முன்னதாக கலெக்டர் பழனி, மாவட்ட சிறப்பு நீதிபதி (மோட்டார் வாகன விபத்துகள்) வெங்கடேசன், முதன்மை சார்பு நீதிபதி ஜெயப்பிரகாஷ், வானுார் நீதிமன்ற மாஜிஸ்திரேட் பிரித்தி, எஸ்.பி., தீபக் சிவாச், இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் சக்திவேல், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவில் நிர்வாக அதிகாரி (பொறுப்பு) சூரியநாராயணன், ஆய்வாளர் உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.