கடலுார்; கடலுார் ஆஸ்பிட்டல் ரோடு, தேவி கருமாரி அம்மன் கோவிலில் திருப்பணியை முன்னிட்டு, பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. அதனையொட்டி, இன்று காலை 6:00 மணிக்கு மேல் 8:30 மணிக்குள் கணபதி பூஜை, லட்சுமி பூஜை, நவகிரக பூஜை, அஸ்திர பூஜை, ேஹாமங்கள் மற்றும் மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, திருப்பணி துவங்க பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.