மயிலம்; மயிலம் முருகன் கோவிலில் ஐப்பசி மாத சஷ்டி பூஜையை முன்னிட்டு சண்முகா அர்ச்சனை நடந்தது. மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமி கோவிலில் சஷ்டியை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு சுவாமிக்கு பால், சந்தனம், தேன் உள்ளிட்ட பொருட்களினால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. காலை 9:00 மணிக்கு யாக சாலை பூஜை நடந்தது. காலை 11:00 மணிக்கு பாலபிஷேகம், மகா தீபாராதனை, தொடர்ந்து மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பிற்பகல் 1:00 மணிக்கு சண்முகா அர்ச்சனை நடந்தது. இரவு 9:00 மணிக்கு மலர்களினால் அலங்கரிக்கபட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.