பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சூளேஸ்வரன்பட்டி அழகாபுரி வீதி விஜயகணபதி கோவிலில், 11ம் ஆண்டு, வருஷாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை, 9:15 மணிக்கு கணபதி ேஹாமம் நடத்தப்பட்டது. காலை, 11:15 மணிக்கு, அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் செய்யப்பட்டன. 12:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து, அன்னதானம் வழங்கப்பட்டது.