Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தருமபுரம் ஆதீனம் அவதாரத் திருநாள்; ... கோவை, மருதமலை கோயிலில் சூரசம்ஹாரம்; தேதிகள் அறிவிப்பு கோவை, மருதமலை கோயிலில் சூரசம்ஹாரம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
750 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
750 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

24 அக்
2024
11:10

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகமும், வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழுவும் இணைந்து, பேரிகை பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கணிமங்கலம் என்ற ஊரில், திருமலைக்கோவில் மைதானத்தில், மாடு கட்டி வைக்க பயன்படுத்தப்பட்ட, 750 ஆண்டு பழமையான கல்வெட்டைக் கண்டுபிடித்தனர். கல்வெட்டை, ஓய்வுபெற்ற காப்பாட்சியர் கோவிந்தராஜ் படித்து கூறியதாவது: பூர்வாதராயர்கள் என்னும் குறுநிலத் தலைவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்றில் முக்கிய இடம்பெற்ற சிற்றரச பரம்பரையினர். இவர்கள் பிற்கால சோழர்கள் காலத்தில், சிறு தலைவர்களாய் இருந்து ஹொய்சாளர்களின் காலத்தில், ஓசூரைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆளும் மகாமண்டலீஸ்வரர்களாக இருந்தனர். சின்னக்கொத்துார், மேல்சூடாபுரம், பேரிகை போன்ற இடங்களில் உள்ள கோவில்களை கட்டி, பல்வேறு தானங்களை வழங்கினர். இவர்களில் ஒரு முக்கிய தலைவர் பூமிநாயக்கன் என்பவரின் கல்வெட்டை தான், கணிமங்கலத்தில் கண்டறிந்துள்ளோம். இவர், இப்பகுதியின் மகாமண்டலீஸ்வரனாக இருந்தபோது, கணிமங்கலம் என்ற ஊருக்கு, பூமிநாயக்க சதுர்வேதிமங்கலம் என்ற தன் பெயரை வைத்து, அதை பிராமணர்களுக்கு தானமாக வழங்கிய செய்தியை, இக்கல்வெட்டு தெரிவிக்கிறது. இவ்வாறு கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லி: ‘ஒருவர் நிரந்தரமான சந்தோஷத்தில் வாழ வேண்டுமெனில், தர்ம மார்க்கத்தில் இருப்பதுதான் ஒரே ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனத்தில் கோலாகலமாக நடந்த மணிவிழாவின் போது குருமகா சன்னிதானம் சிவஞான கொலு ... மேலும்
 
temple news
திருப்பதி;  திருமலையில் இன்று கார்த்திகை வனபோஜன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. உற்சவ ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; நத்தம் அய்யாபட்டியில் காளியம்மன் கருப்புசாமி கோயில் உள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
மேலூர்; ராஜஸ்தானை சேர்ந்த சமண துறவிகள் முனி ஹிமான்ஷூ குமார்ஜி,முனி ஹேமந்த் குமார்ஜி. இவர்கள் உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar