பழநி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 2.99 கோடி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2024 11:10
பழநி; பழநி கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ 2.99 கோடி காணிக்கையாக கிடைத்தது. பழநி கோயிலில் மாதம்தோறும் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் வேண்டுதல்கள் நிவர்த்திக்காக உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர். இந்த மாத உண்டியல் எண்ணிக்கையில் ரூ. 2 கோடியே 99 லட்சத்து இரண்டாயிரத்து 134, வெளிநாட்டு கரன்சி 756 எண்ணங்கள், தங்கம் 927 கிராம், வெள்ளி 14.047 கிலோ கிடைத்தது. உண்டியல் எண்ணிக்கையில் கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, அதிகாரிகள், கோயில் ஊழியர்கள், கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.