Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லிங்கராஜபுரம் பகுதியில் கிராம தேவதை ... ஐப்பசி வெள்ளி; மாகாளியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் ஐப்பசி வெள்ளி; மாகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் பாதையில் உலா வரும் காட்டு யானைகள்; பக்தர்களுக்கு எச்சரிக்கை
எழுத்தின் அளவு:
அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் பாதையில் உலா வரும் காட்டு யானைகள்; பக்தர்களுக்கு எச்சரிக்கை

பதிவு செய்த நாள்

25 அக்
2024
11:10

கோவை, மருதமலை சுப்ரமணியர் சுவாமி கோவில் மற்றும் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மேலும் இந்த இரண்டு கோவில்களும் வனப் பகுதிக்குள் அமைந்து உள்ளது.


கோவையில் கடந்த சில மாதங்களாக மருதமலை, தொண்டாமுத்தூர், தடாகம், மாங்கரை ஆகிய பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மருதமலை கோவிலில் பக்தர்கள் படிக்கட்டுகளில் செல்லும் பாதையில் காட்டு யானை முகாமிட்டு, கடந்து சென்றது பக்தர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அதே போல் பெரிய தடாகம் பகுதியில் உள்ள அனுவாவி சுப்பிரமணியர் கோவில் நடைபாதையிலும் அடிக்கடி யானைகள் உலா வருகின்றன. இந்த நிலையில் சமீப காலமாக கோவிலுக்கு அருகே காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் பக்தர்கள் மற்றும் காலை நடை பயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களுக்கு நேர கட்டுப்பாடு விதித்து வனத்துறை அறிவிப்பு வெளியிட்டது. மேலும் மருதமலை கோவிலில் உள்ள முன்வாயில் கேட்டை குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் மூடவும், மேலும் அருகில் உள்ள நடை பாதையை முற்றிலுமாக மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் நேர கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்து இருந்தனர். காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அனுமதிக்குமாறும், இது குறித்து பொதுமக்களுக்கு தெரிவித்திடும் வகையில் விழிப்புணர்வு பலகைகள் வைத்து கண்காணிப்பாள்களை நியமிக்குமாறு கோவில் நிர்வாகத்தை வனத்துறை அறிவுறுத்தினர். தவறும் பட்சத்தில் மனித - யானை மோதல் ஏதேனும் ஏற்பட்டால் கோவில் நிர்வாகமே பொறுப்பு எனவும் வனத் துறையினர் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் சுற்று வட்டார பகுதிகளில் உணவு தேடி உலா வரும் யானைகளை வனத்துறை மற்றும் விவசாயிகள் விரட்டுவதால் எங்கு செல்வது என்று தெரியாமல் இன்று காலை பெரிய தடாகம் அனுவாவி சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு செல்லும் பாதையில்  வாலை சுருட்டிக் கொண்டு ஆக்ரோஷமாக யானை உலா வந்து கொண்டு உள்ளது. அங்கு செல்லும் பக்தர்கள் பாதுகாப்புடனும் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பாலை: மதுரை திருப்பாலை இஸ்கான் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருப்பூர்: ஆடி கிருத்திகையான நேற்று, வாலிபாளையம் ஸ்ரீகல்யாண சுப்பிரமணியர் கோவிலில் சிறப்பு அலங்கார ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார் அடுத்த, வல்லக்கோட்டை கிராமத்தில், 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த முருகன் கோவில் ... மேலும்
 
temple news
கோவை கொடிசியா வளாகம் அருகில் இஸ்கான் கோவில் உள்ளது. ஆண்டுதோறும் இங்கு கிருஷ்ண ஜெயந்தி விழா, கோலாகலமாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ தர்ம சாஸ்தா பூஜா சங்கம் சார்பில், ஆர்.எஸ்.புரத்தில் ராதா கல்யாண மஹோத்ஸவம், பக்தர்கள் சூழ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar