13 ஆண்டுகளுக்குப் பின் நடந்த மல்லாங்கிணர் முத்தாலம்மன் கோயில் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2024 11:10
காரியாபட்டி; மல்லாங்கிணர் முத்தாலம்மன் கோயில் திருவிழா, 13 ஆண்டுகளுக்குப் பின் நடந்தது. மல்லாங்கிணர் முத்தாலம்மன் கோயில் திருவிழா, 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். பல்வேறு காரணங்களுக்காக திருவிழா நடைபெறுவது நிறுத்தப்பட்டது. 13 ஆண்டுகளுக்குப் பின் இந்த ஆண்டு திருவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு ஒரு மாதத்திற்கு முன் கொடியேற்றத்துடன் துவங்கியது. முத்தாலம்மனுக்கு காப்பு கட்டி, பொங்கல் வைத்து, மஞ்சள் நீராட்டு நடந்தது. முப்புடாதி அம்மன், கங்கை அம்மன், அய்யனார் சிலை, முத்தாலம்மன் சிலை எடுத்து வந்தனர். முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்தனர். நேற்று முன் தினம், அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.