தமிழகம் வரும் சிருங்கேரி சங்கராச்சாரியார்; நவம்பர் 13 வரை விஜய யாத்ரா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25அக் 2024 11:10
சென்னை; ஸ்ரீஆதிசங்கரரால் ஸ்தாபிக்கப்பட்ட சிருங்கேரி மடத்தின் இளைய சங்கராச்சாரியார் ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமிகள் நாளை தமிழகம் வருகிறார். அவரின், ‘விஜய யாத்ரா – 2024 சென்னை’ நாளை துவங்குகிறது. பெங்களூரில் இருந்து, நாளை மாலை, 3:00 மணிக்கு, இளைய சங்கராச்சாரியார் ஒசூர் வருகிறார். மாலை ரத்னகிரியில் உள்ள முருகன் கோயிலுக்கு செல்லும் அவர், அங்கிருந்து இரவு, காஞ்சிபுரத்தில் உள்ள சிருங்கேரி சங்கர மடம் வருகிறார். துாளி பாத பூஜை நடக்கிறது. பக்தர்களின் வரவேற்பை அவர் ஏற்றுக் கொள்கிறார். ஸ்ரீசந்திரமவுலீஸ்வர் பூஜை செய்கிறார். அடுத்த நாளும் காஞ்சிபுரத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் அவர், 28ல் சென்னை வருகிறார். அன்று முதல், நவம்பர் 13 வரை சென்னையில் தங்கி, பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதன்பின் திருப்பதி செல்ல உள்ளார்.