Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிருங்கேரி இளைய சங்கராச்சாரியார் ... திருப்பதி பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு..!; தேவஸ்தானம் அட்வைஸ் திருப்பதி பாதயாத்திரை செல்லும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரம்பரிய நெற்கதிர் அறுவடை திருவிழா: பழங்குடி மக்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
பாரம்பரிய நெற்கதிர் அறுவடை திருவிழா: பழங்குடி மக்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

26 அக்
2024
12:10

கூடலூர்; கூடலூர் அருகே, பழங்குடி மக்களின் பாரம்பரியமான பூ புத்தரி எனப்படும் நெற்கதிர் அறுவடை திருவிழா விமர்சியாக நடந்தது.


நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதியில் பணியர் இன பழங்குடி மக்கள் சார்பில், நெற்பயிர்களுக்கு நன்றி செலுத்தும் வகையிலும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் நலமுடன் இருக்கவும், பேரிடர் மற்றும் வன விலங்குகளால் நெற் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்க, நெல் அறுவடைக்கு முன்பாக பாரம்பரியமான பூ புத்தரி எனப்படும் கதிர் அறுவடை திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பத்தாம் நாள் கொண்டாடி வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான திருவிழா இன்று நடந்தது. நம்பலக்கோட்டை வேட்டைக்கொருமகன கோவில் காலை சிறப்பு பூஜை நடந்தது. இதில் பங்கேற்ற பழங்குடி மக்கள், பின் ஊர்வலமாக புத்தூர்வயல் வந்தனர். அங்கு, கதிர் அறுவடைக்கு தேர்வு செய்யப்பட்ட இடத்தில் பாரம்பரிய பழங்குடியினர் இசையுடன் விளக்கேற்றி பூஜை செய்தனர். தொடர்ந்து, பூ புத்தரி திருவிழா நடந்தது. இதற்காக பத்து நாட்கள் விரதம் இருந்து மூன்று பழங்குடியினர் ஆண்கள் நெற்கதிர் அறுவடை செய்து கட்டுகளாக கட்டி, ஊர்வலமாக வட்டைப்பாறை பகவதி அம்மன் கோயில் எடுத்து சென்றனர். அங்கு நெற் கதிருக்கு பூஜை செய்தனர். தொடர்ந்து, பழங்குடியினர் பாரம்பரிய இசையுடன், பழங்குடி பெண்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. அங்கிருந்து, நெற்கதிர் கட்டுகள் மங்குழி பகவதி அம்மன் கோவில், புத்தூர்வயல் விஷ்ணு கோவில், தேவாலா வேட்டைக்கொருமகன் கோவில் மற்றும் நம்பாலக்கோட்டை வேட்டைக்கொருமகன் கோவிலுக்கும், எடுத்து சென்றனர். கோயில்களில், நெற்கதிர்கருக்கு சிறப்பு பூஜை செய்து, விவசாயிகளுக்கு பிரசாதமாக வழங்கினர். பழங்குடி மக்களின் பாரம்பரியமான விழாவில் அனைத்து தரப்பு மக்களும் திரளாக பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar