துாத்துக்குடி சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி தேரோட்டம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28அக் 2024 10:10
துாத்துக்குடி; துாத்துக்குடி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில், பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, தினமும் மாலையில் அம்மன் பல அலங்காரங்களில் வாகனங்களில் வீதியுலா நடந்தது. சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. காலை 10:30 மணிக்கு தேரோட்டம் துவக்கியது. கீழ ரதவீதியில் இருந்து புறப்பட்ட தேர், நான்கு ரத வீதிகள் வழியாக சென்று மதியம் 1:00 மணிக்கு நிலையை அடைந்தது. தேருக்கு முன் மயிலாட்டம், ஒயிலாட்டம் பொய்க்கால் குதிரை, தேவராட்டம், சிலம்பாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தன. தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். பாகம்பிரியாள் அறக்கட்டளை சார்பில், சிவன் கோவில் அருகேயுள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.