Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெற்றிவேல்.. வீரவேல்.. கோஷம் விண்ணை ... முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்; பக்தர்கள் பரவசம் முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 நவ
2024
05:11

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் கோலாகலமாக நடந்தது.

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், முருகனின் ஏழாம் படை வீடாக பக்தர்களால் கருதப்படுகிறது. இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலில் ஆண்டுதோறும், கந்த சஷ்டி விழா கோலகாலமாக கொண்டாடப்படும். இந்தாண்டு, கந்த சஷ்டி விழா, கடந்த, 2ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் யாகசாலை பூஜைகள், அபிஷேக பூஜை, திருவீதி உலா நடந்தது. இந்நிலையில், கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடந்தது.

இன்று காலை, 5:15 மணிக்கு கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, சுப்பிரமணிய சுவாமிக்கு, 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 6:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல், 3:00 மணிக்கு, சுப்பிரமணிய சுவாமி சூரசம்ஹாரத்திற்காக, பச்சை நாயகி அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனைத்தொடர்ந்து, வீரபாகு, குதிரை வாகனத்தில் வந்து தாரகாசுரன், பானுகோபன், சிங்கமுகாசுரன், சூரபத்மன் ஆகியோரிடம் தூது சென்றார். அதன்பின், சுப்பிரமணிய சுவாமி, ஆட்டுக்கிடாய் வாகனத்தில் எழுந்தருளி, பானுகோபன், சிங்கமுகசுரன், தாரகாசுரன், சூரபத்மனை வதம் செய்தார். வதத்திற்கு பிறகு, சுப்பிரமணிய சுவாமிக்கு வெற்றிவாகை சூடும் நிகழ்ச்சி நடந்தது.  அதன்பின், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை, வீரபாகு ஆகியோருக்கு சாந்தாபிஷேகம் நடந்தது. சிறப்பு பூஜைக்கு பின், சுப்பிரமணியசுவாமி, வள்ளி தெய்வானை சமேதராய், தங்க யானை வாகனத்தில் எழுந்தருளி, திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சூரசம்ஹார நிகழ்ச்சியில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா அரோகரா என, கோஷம் எழுப்பினர். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மருதமலை மலைப்பாதையில் இன்று இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதில், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.  கந்த சஷ்டி விழாவின் ஏழாம் நாளான நாளை காலை, 9:00 மணி முதல் 10:30 மணிக்குள், திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அழிசூர்:உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமத்தில், ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதின வளாகத்தில் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில், 10 நாட்கள் ... மேலும்
 
temple news
அழகர்கோவில் : மதுரை சித்திரைத்திருவிழாவில் முக்கிய நிகழ்வான வைகையாற்றில் கள்ளழகர் இறங்குவதற்காக ... மேலும்
 
temple news
பிரான்மலை: சிங்கம்புணரி அருகே பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயில் தேரோட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar