Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயில்களில் ... சிங்கம்புணரி சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா சிங்கம்புணரி சிவன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா; பஞ்ச பூதங்களின் உதவியுடன் ஈசனுக்கு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
சிவன் கோயில்களில் அன்னாபிஷேக விழா; பஞ்ச பூதங்களின் உதவியுடன் ஈசனுக்கு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 நவ
2024
03:11

உத்தரகோசமங்கை; அரிசி என்பது வாழ்க்கை செழுமை மற்றும் செழிப்பு ஆகியவற்றின் சின்னமாகும். நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. ஆகாயத்திலிருந்து தோன்றிய காற்றின் உதவியுடன் நெருப்பை மூட்டி மண்ணிலிருந்து விளைந்த அரிசியினை நீரில் வேகவைத்து பஞ்ச பூதங்களின் உதவியுடன் அன்னமாக்கி பஞ்சபூதங்களையும் தன் வசத்தில் இயக்கும் ஈசனுக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.


ஐப்பசி மாதத்தில் வரக்கூடிய பவுர்ணமி முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அன்றைய தினம் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் விமர்சையாக நடந்தது. உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் மூலவர் மங்களநாதருக்கு 16 வகையான அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நிறைவேற்றப்பட்டு பச்சரிசியால் சாதம் வடிக்கப்பட்டு அவற்றை கொண்டு அன்னத்தால் முழுவதும் சாற்றப்பட்டது. பின்னர் காய்கறி, பழங்கள், இனிப்பு உள்ளிட்டவைகளால் அலங்காரம் செய்யப்பட்டது. விசேஷ தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.


* சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர், பவளநிறவல்லியம்மன் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடந்தது. இன்று காலை 10:00 மணிக்கு மூலவர் பூவேந்திய நாதருக்கு 11 வகையான சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைகள் நடந்தது. 30 கிலோ பச்சரிசி சாதம் வடிக்கப்பட்டு மூலவரின் திருமேனியில் சாற்றப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது. லிங்கத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட அன்னத்தினை கால்நடைகளுக்கும், மீதமுள்ள பிரசாதம் மாரியூர் கடலில் கரைக்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் மகா சபை பிரதோஷ அன்னதான கமிட்டினர் செய்திருந்தனர்.


* சாயல்குடி அருகே டி.எம்.கோட்டையில் உள்ள செஞ்சடை நாதர் சமேத கருணகடாச்சி அம்மன் கோயிலில் அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது. பச்சரிசி சாதம் திருமேனியில் சாற்றப்பட்டு காய்கறிகள், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது. பூஜைகளை நாகநாத குருக்கள் செய்திருந்தார். பக்தர்களுக்கு அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது. 


* கீழக்கரை தட்டான் தோப்பு தெரு நாராயணசாமி கோயிலில் உள்ள லிங்கேஸ்வரருக்கு ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோவிலூர்; மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் திருவண்ணாமலை, அபிதகுஜாம்பாள் சமேத அண்ணாமலையாருக்கு ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தை அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; கன்னட இசையின் முன்னோடியான புரந்தர தாசரின் மூன்று நாள் ஆராதனைப் பெருவிழா, திருமலை திருப்பதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவிளையாட்டம் அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் மாணிக்கவாசகர்  உலோக சிலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar