Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சி குமரகோட்டத்தில் கிருத்திகை ... அன்னையின் 51ம் ஆண்டு மகா சமாதி தினம்; அன்னை அறை தரிசனத்திற்கு திறப்பு அன்னையின் 51ம் ஆண்டு மகா சமாதி தினம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலையணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்
எழுத்தின் அளவு:
வல்லபை ஐயப்பன் கோயிலில் மாலையணிந்து விரதம் துவங்கிய பக்தர்கள்

பதிவு செய்த நாள்

16 நவ
2024
02:11

ரெகுநாதபுரம்; ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவங்கினர்.


வல்லபை ஐயப்பன் கோயிலில் இன்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்ஸவமூர்த்திக்கு அஷ்டாபிஷேகம் நடந்தது. வல்லபை விநாயகர், மஞ்சமாதா, ஆஞ்சநேயர், சங்கரன், சங்கரி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. காலை 5:00 மணி முதல் ரெகுநாதபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஐயப்ப பக்தர்கள் துளசி மணி மாலை அணிவதற்காக நீண்ட வரிசையில் இருந்து மாலை அணிந்து சென்றனர். கோயில் தலைமை குருசாமி ஆர்.எஸ். மோகன், கன்னிசாமி மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவித்தார். ஐயப்ப சரணகோஷம் முழங்கப்பட்டது. இன்று முதல் தொடர்ந்து சபரிமலை யாத்திரை செல்லும் வரையிலும் 48 நாட்களுக்கு தினமும் பகல் மற்றும் இரவு நேரங்களில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை மதியம் பஜனையும் கூட்டுப் பிரார்த்தனை உள்ளிட்டவைகள் நடக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவில் நடப்பதை போன்று இங்கும் பள்ளி வேட்டை, பேட்டை துள்ளுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் அரங்கேற்றப்படுகிறது. ஏற்பாடுகளை ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயில் சேவை நிலைய அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar