Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னையின் 51ம் ஆண்டு மகா சமாதி தினம்; ... காரமடை செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு காரமடை செல்வ விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவூர் பால சாஸ்தா ஐயப்பன் கோயிலில் தீர்த்த குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
சேவூர் பால சாஸ்தா ஐயப்பன் கோயிலில் தீர்த்த குடம் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

17 நவ
2024
06:11

அவிநாசி; சேவூர் ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக் குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.

அவிநாசி வட்டம், சேவூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில்,வரும் இருபதாம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக இன்று சேவூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். நாளை (திங்கள்)விக்னேஸ்வர பூஜை, மிருத்சங்கிரஹணம்,ஸ்ரீ ஹரிஹர பஞ்சாசனம் உள்ளிட்டவைகளுடன் முதல் கால வேள்வி பூஜைகள் துவங்குகிறது. நாளை மறுதினம் ஸ்ரீ ஹரிஹர புத்திர ஆச்சார்ய வர்ண பூஜை, ஸ்ரீ பூமிநாதர் ஆச்சார்ய பூத சோதன அந்தர்மாத்ருகா பூஜை,ஸ்ரீ ஹரிஹர புத்திரனுக்கு ரஜத பந்தனம், எந்திர ஸ்தாபனம் ஆகியவற்றுடன் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெறுகிறது.

இருபதாம் தேதி நான்காம் கால வேள்வி பூஜையில்,யாத்ரா தானம், கடம் புறப்படுதலுடன் அதிகாலை 4:50 மணிக்கு மேல் 5:15 மணிக்குள் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், பந்தள ராஜா பிரதிநிதி மூலம் திருநாள் ஸ்ரீ ஸ்ரீ சங்கர் வர்மராஜா தலைமையில், தாராபுரம் வரன் பாளையம் திருநாவுக்கரசர் மடாலயம் மௌனானந்த சிவாசலம் ஐயா மற்றும் அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய காமாட்சி தாச சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மூலாலய மூலவர்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மஹாபிஷேகம், மஹா தீபாரதனை, ஹரிவராசனம் ஆகியவை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மகிஷாசுரமர்த்தினி கோவிலில் தைப்பூச பாதயாத்திரை பக்தர்கள் நலன் வேண்டி சிறப்பு யாகம் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar