Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னையின் 51ம் ஆண்டு மகா சமாதி தினம்; ... காரமடை செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு காரமடை செல்வ விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவூர் பால சாஸ்தா ஐயப்பன் கோயிலில் தீர்த்த குடம் ஊர்வலம்
எழுத்தின் அளவு:
சேவூர் பால சாஸ்தா ஐயப்பன் கோயிலில் தீர்த்த குடம் ஊர்வலம்

பதிவு செய்த நாள்

17 நவ
2024
06:11

அவிநாசி; சேவூர் ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக் குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு சென்றனர்.

அவிநாசி வட்டம், சேவூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பால சாஸ்தா ஐயப்பன் கோவிலில்,வரும் இருபதாம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக இன்று சேவூர் ஸ்ரீ அங்காளம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீ ஐயப்பன் கோவிலுக்கு 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். நாளை (திங்கள்)விக்னேஸ்வர பூஜை, மிருத்சங்கிரஹணம்,ஸ்ரீ ஹரிஹர பஞ்சாசனம் உள்ளிட்டவைகளுடன் முதல் கால வேள்வி பூஜைகள் துவங்குகிறது. நாளை மறுதினம் ஸ்ரீ ஹரிஹர புத்திர ஆச்சார்ய வர்ண பூஜை, ஸ்ரீ பூமிநாதர் ஆச்சார்ய பூத சோதன அந்தர்மாத்ருகா பூஜை,ஸ்ரீ ஹரிஹர புத்திரனுக்கு ரஜத பந்தனம், எந்திர ஸ்தாபனம் ஆகியவற்றுடன் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக வேள்வி பூஜைகள் நடைபெறுகிறது.

இருபதாம் தேதி நான்காம் கால வேள்வி பூஜையில்,யாத்ரா தானம், கடம் புறப்படுதலுடன் அதிகாலை 4:50 மணிக்கு மேல் 5:15 மணிக்குள் விமானங்களுக்கு மஹா கும்பாபிஷேகம், பந்தள ராஜா பிரதிநிதி மூலம் திருநாள் ஸ்ரீ ஸ்ரீ சங்கர் வர்மராஜா தலைமையில், தாராபுரம் வரன் பாளையம் திருநாவுக்கரசர் மடாலயம் மௌனானந்த சிவாசலம் ஐயா மற்றும் அவிநாசி திருப்புக்கொளியூர் வாகீசர் மடாலய காமாட்சி தாச சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மூலாலய மூலவர்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து மஹாபிஷேகம், மஹா தீபாரதனை, ஹரிவராசனம் ஆகியவை நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஸ்ரீ தர்மசாஸ்தா டிரஸ்ட் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar