Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊத்துக்கோட்டை செஞ்சுலட்சுமி அம்மன் ...  பழநி வேணுகோபாலசுவாமி கோயில் கும்பாபிஷேகம் பழநி வேணுகோபாலசுவாமி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் நாளை 108 சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில் நாளை 108 சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

17 நவ
2024
06:11

பெங்களூரு; கார்த்திகை மாத சோமவாரத்தை முன்னிட்டு, சிவாஜி நகர் காசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில், நாளை 108 சங்காபிஷேகம் நடக்கிறது.

கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை தான் சோமவார விரதமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம், சிவனுக்கு மிகவும் உகந்த விரதம். சிவனின் தலையில் இருக்கும் சந்திரன், சோமவார விரதத்தை கடைபிடித்தான். அதனால் அவன், சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி, சிவனின் தலையிலேயே இடம் பெற்றான். கார்த்திகை மாத சோமவாரங்களில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வர். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். எனவே, அவரை குளிர்விக்கும் பொருட்டு, சங்காபிஷேகம் செய்வர். கார்த்திகை மாதம், சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன், நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே, சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க மாதத்தில், சிவாஜி நகர் திம்மையா சாலையில் உள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதேஸ்வரர் கோவிலில், கார்த்திகை சோமவாரமான, திங்கட்கிழமை தோறும் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. நாளை காலை 10:00 மணிக்கு சங்கு கலச பூஜைகள் ஆரம்பமாகும். இதை தொடர்ந்து, மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, இளநீர், பால், தயிர், பஞ்சாமிர்தம் உட்பட 16 திரவியங்களால் விஸ்வநாதேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின் தாரா அபிஷேகம் நடக்கிறது. சகஸ்ரதாரை அபிஷேகம், கவ்ய சிருங்கம் எனும் நந்தியின் வாயிலில் இருந்து நீர் விழும் அபிஷேகம்; 108 சங்கு தீர்த்த அபிஷேகத்துக்கு பின், கலச அபிஷேகம் நடக்கிறது. கார்த்திகை மாதம் நான்கு திங்கட்கிழமைகளிலும், இதுபோன்று சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. பூஜைகளை, பிரதான அர்ச்சகர் ராஜாபாலசந்திர சிவம், பிரகாஷ் சுவாமிகள் செய்துள்ளனர். விழா ஏற்பாடுகளை செய்துள்ள ஆர்.பி.வி.ஜி.சி.சி., டிரஸ்டிகள், சங்கு அபிஷேகத்தில் பங்கேற்குமாறு, பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar