Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவில் உண்டியல் ... பழநி கோயிலில் ரஷ்யா பக்தர்கள் வேல் காணிக்கை செலுத்தி தரிசனம் பழநி கோயிலில் ரஷ்யா பக்தர்கள் வேல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் துவங்கியது
எழுத்தின் அளவு:
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் துவங்கியது

பதிவு செய்த நாள்

27 நவ
2024
10:11

பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது.


கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இங்கு கார்த்திகை மாதம் ஏகாதசி திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா வரும் டிச. 11ம் தேதி நடக்கிறது. விழாவையொட்டி உள்ள செம்பை சங்கீத உற்சவம் நேற்று மாலை 6:45 மணிக்கு மாநில உயர் கல்வி, சமூக நீதித்துறை அமைச்சர் பிந்து துவக்கி வைத்தார். தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக குருவாயூர் தொகுதி எம்.எல்.ஏ., அக்பர், குருவாயூர் நகராட்சி தலைவர் கிருஷ்ணதாஸ் ஆகியோர் பங்கேற்றனர். சங்கீத உற்சவர் துணை கமிட்டி கன்வினர் விஸ்வநாதன், தேவஸ்தான நிர்வாக குழு உறுப்பினர்கள மனோஜ், ரவீந்திரன், ஸ்ரீமானவேதன் ராஜா, பிரஹமஸ்ரீ மல்லிச்சேரி பரமேஸ்வரன் நம்பூதிரிப்பாடு, பிரஹமஸ்ரீ தினேசன் நம்பூதிரிப்பாடு, நிர்வாகி வினயன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் வயலின் கலைஞர் குமாரி எ. கன்னியாகுமாரிக்கு செம்பை நினைவு விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து குமாரி எ. கன்னியாகுமாரியின் சங்கீதக் கச்சேரி நடந்தது. இவருடன் எம்பார் கண்ணன், ஸ்ரீகாந்த் ஆகியோர் வயலின் வாசித்தனர். இவர்களுக்கு ட்ரிப்ளிகேன் சேகர் (தவில்), உடுப்பி ஸ்ரீகாந்த் (கஞ்சிரா), வைக்கம் கோபாலகிருஷ்ணன் (கடம்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். மாநில அரசின் சிறந்த திரைப்பட பின்னணி பாடகருக்கான விருது பெற்ற வித்யாதரனை நிகழ்ச்சியில் கவுரவித்தன. 10 கிராம் எடை கொண்ட மூலவரின் உருவம் பதித்த தங்கப்பதக்கமும் ரூ. 50,0001, தகுதி சான்றிதழ் மற்றும் தகடு ஆகியவையாகும் செம்பை நினைவு விருது. 15 நாள் உற்சவத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar