Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ... திருவதிகை ஆதிகுணபரேஸ்வரர் கோவிலில் பாலாலயம் பூஜை திருவதிகை ஆதிகுணபரேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக பாலாலய பூஜை
எழுத்தின் அளவு:
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக பாலாலய பூஜை

பதிவு செய்த நாள்

29 நவ
2024
03:11

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜைகள் நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேகம் 2011ல் நடந்தது. அறநிலையத்துறை, பழனி பாதயாத்திரை பக்தர்கள் குழு, உபயதாரர்கள், தன்னார்வலர்கள் கொண்ட குழுவின் ஆலோசனைக்கு பின் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இன்று நடந்த கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜையில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லோகிராஜன், பழனி பாதையாத்திரை பக்தர்கள் குழு சார்பில் தண்டபாணி, வஜ்ரவேல், கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் உபயதாரர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


அறநிலையத் துறையினர் கூறியதாவது: கும்பாபிஷேகத்தின் முதற்கட்டமான பாலாலய பூஜைகளுக்கு பின் ராஜகோபுரம் உட்பட 3 கோபுரங்கள், கொடிமரம், கோயில் கருவறை, பரிவார தெய்வங்கள் உள்ள இடங்கள் ஆகியவற்றை புனரமைக்க அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கொடிமரம் மற்றும் கோபுர கலசங்களுக்கு தங்க முலாம் பூச திட்டமிடப்பட்டுள்ளது. கோயில் முன்புறம் சிதிலமடைந்து ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை மீட்டு புனரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து பணிகளையும் இன்னும் சில மாதங்களில் முடித்தபின் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கூடலூர்: கூடலூரில் சத்ய சாய்பாபா நுாற்றாண்டு விழா ரத யாத்திரை ஊர்வலம் சிறப்பாக நடந்தது.சத்ய ... மேலும்
 
temple news
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் 5 கோபுரம், 5 கொடி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவில் தேருக்கு, ஆறு மாதங்களுக்கு மேலாகியும், இன்னும் ஷெட் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: விழுப்புரம் புதுச்சேரி சாலையிலுள்ள மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் ஆவணி ... மேலும்
 
temple news
விருதுநகர் அருகே ஆர்.ஆர்., நகர் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேர்பவனி நடந்தது. இந்த சர்ச் திருவிழா ஆக. 31ல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar