கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கப்பளாங்கரை விநாயகர், முருகன் மற்றும் ஐயப்ப சுவாமி கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. கிணத்துக்கடவு, கப்பளாங்கரையில், விநாயகர், முருகன் மற்றும் ஐயப்ப சுவாமி கோவில் அமைந்துள்ளது. கோவிலில், திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேக விழாவில், 28ம் தேதி மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி மற்றும் லட்சுமி ஹோமம், பூர்ணாஹுதி, வாஸ்து சாந்தி, பூர்வாங்க பூஜைகள், முதல் கால யாக பூஜைகள் நடந்தது. நேற்று, 29ம் தேதி, காலை, இரண்டாம் கால யாக பூஜை, நாடி சந்தானம், கலசம் புறப்பாடு போன்ற நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து விமான கும்பாபிஷேகம் மற்றும் விநாயகர், முருகன் மற்றும் ஐயப்ப சுவாமிக்கு, மஹா அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.