Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கார்த்திகை தீபத் திருவிழா; ... தேசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் நிலவுக்கால் வைக்கும் நிகழ்ச்சி தேசி லிங்கேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழா; அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரர் உலா
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழா; அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரர் உலா

பதிவு செய்த நாள்

05 டிச
2024
10:12

திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில், கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்கியது. அப்போது, பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என கோஷம் எழுப்பி வழிபட்டனர்.முதல் நாள் இரவு உற்சவத்தில் அதிகார நந்தி வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்கள் அருள் பாலித்தனர்.


திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா நேற்று கொடியேற்றத்துடன், முதல் நாள் விழா தொடங்கியது. இதையொட்டி அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டு,   பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய  உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.  தொடர்ந்து, பஞ்ச மூர்த்திகள், தங்ககொடி மரம் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து,  50க்கும் மேற்பட்ட  சிவாச்சாரியர்கள் வேத மந்திரம் முழங்க காலை, 6:25 மணிக்கு, 63 அடி உயர  தங்க கொடிமரத்தில்  கொடி ஏற்றப்பட்டது. கலெக்டர் பாஸ்கர பாண்டியன், கோவில் இணை ஆணையர் ஜோதி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 


சுவாமி உலா: தொடர்ந்து முதல் நாள் விழாவில், காலை 10:00 மணிக்கு பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் மர விமான வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வெள்ளி ஆச்சி விமானத்திலும், பராசக்தி அம்மன் கண்ணாடி விமானத்திலும், வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதை தொடர்ந்து இரவு 9:00 மணிக்கு நடந்த பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில் விநாயகர் மர மூஷிகம் வாகனம், வள்ளி தெய்வானை சமேத சுப்பரமணியர் மர மயில் வாகனம், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேசஸ்வரர்  வெள்ளி அதிகார நந்தி, பராசக்தி அம்மன் வெள்ளி சிம்ம வாகனம், சண்டிகேஸ்வரர் புலிக்குட்டி வாகனத்திலும், வீதி உலா சென்று  பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 


பக்தர்கள் விரதம்:  வரும் 10ல், பஞ்ச மூர்த்திகள் தேரோட்டமும், 13 அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபமும், மாலை, 6:00 மணிக்கு, 2,668, அடி உயர அண்ணாமலையார் மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது. மகா தீப தரிசனம், 21, தலைமுறைக்கு முக்தி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மகா தீபம், 11 நாட்களுக்கு எரியும்.  தீப விழாவை முன்னிட்டு, பக்தர்கள் மாலை அணியத்தொடங்கி உள்ளனர். இவர்கள், விழா நாட்களில் விரதமிருந்து  மகா தீபத்தை கண்டு வழிபடுவர். தீப திருவிழா தொடங்கியுள்ள நிலையில் கோவில் வளாகம், நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மகா தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் ஆவின் நெய், 34.50 லட்சம் ரூபாய் மதீப்பீட்டில், 4,500 லிட்டரை, கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar