பொங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; முஸ்லிம்கள் சீர்வரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05டிச 2024 11:12
பல்லடம்; பல்லடம் பொங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம், கடைவீதியில் பிரசித்தி பெற்ற பொங்காளியம்மன் கோவில் உள்ளது. கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை, 9:15 மணிக்கு நடக்கிறது. காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் நடத்தி வைத்தார். முன்னதாக, டிச., 3 அன்று மூத்த பிள்ளையார் வழிபாடுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. முதல், இரண்டாம், மூன்றாம் கால யாக வேள்விகள் நிறைவுற்றன. இன்று காலை நான்காம் கால வேள்வி வழிபாட்டை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெறும்.ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்; இதற்கேற்ப அன்னதானம், பார்க்கிங் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில், நேற்று மாலை, முஸ்லிம்கள் பொங்காளியம்மனுக்கு சீர்வரிசைகள் எடுத்து வந்தனர். விழா குழுவினர் அவர்களை வரவேற்று உபசரித்தனர்.