பதிவு செய்த நாள்
05
டிச
2024
02:12
கூடலூர்; மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.
நீலகிரி மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற முதுமலை, மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் திருவிழா நேற்று காலை 9:05 மணிக்கு மங்கள இசையுடன் துவங்கியது. தொடர்ந்து, திருவிளக்கு ஏற்றுதல், மூத்த பிள்ளையார் வழிபாடு, கணபதி வேள்வி, நவக்கோள் வேள்வி, அன்னம் பாலிப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாலை 4:00 மணிக்கு மூத்த பிள்ளையார் வழிபாடு, கும்ப திருமேனி வழிப்பாடு, முதற்கால யாக வேள்வி, நிறையாகுதி, பேரொளி வழிபாடு நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று காலை 7:35 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. தொடர்ந்து பிள்ளையார் வழிபாடு, இரண்டாம் கால வேள்வி நடந்தது. காலை 9:05 மணிக்கு நாடியின் வழியாக, மூலதிருமேனியை அடைதல் நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து, நீலகிரி கலெட்டர் லட்சுமி பவ்யா முன்னிலையில் காலை 9:45 மணிக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து, மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. விழாவில் ஊட்டி ஆர்.டி., சதீஷ், கூடலூர் டி.எஸ்.பி., வசந்த குமார், இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் வீரக்குமார் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் கமிட்டி, கிராம மக்கள் செய்திருந்தனர்.