திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பரணி தீபம்; பக்தர்கள் தீப தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
13டிச 2024 10:12
திருநெல்வேலி ; நெல்லையப்பர் காந்திமதி கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் தீப தரிசனம் செய்து வழிபட்டனர்.
பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது. அதில், கார்த்திகை தீபத்திருவிழா சிறப்பு மிக்கது. கார்த்திகை தீப திருவிழா 2 நாட்கள் கொண்டாடப்படுகிறது. முதல் நாளான நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக நெல்லையப்பர் கோவிலில் சாயரட்சை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து, நெல்லையப்பர் சன்னதி மகா மண்டபத்தில் ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள பரணி தீபத்திற்கு பூஜைகள் செய்து பரணி மகா தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் தீப தரிசனம் செய்து வழிபட்டனர். இன்று மாலை மகா ருத்ர தீபம் எனப்படும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடை பெறுகிறது.