Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆன்மாவுக்கும் ஆண்டவனுக்கும் ... பரமக்குடி பெருமாள் கோயிலில் ஏக தின லட்சார்ச்சனை விழா பரமக்குடி பெருமாள் கோயிலில் ஏக தின ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சுவாமிமலையில் கார்த்திகை தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்து பரவசம்
எழுத்தின் அளவு:
சுவாமிமலையில் கார்த்திகை தேரோட்டம்; பக்தர்கள் வடம் பிடித்து பரவசம்

பதிவு செய்த நாள்

13 டிச
2024
11:12

தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும். இங்கு ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை திருவிழா 11 நாட்களுக்கு வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். 


அதுபோல, இந்தாண்டு திருவிழா கடந்த டிச.5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி பிரகார உலா நடைபெற்றது.  விழாவின் முக்கிய நிகழ்வான இன்று, (13ம் தேதி) திருக்கார்த்திகையை முன்னிட்டு, திருத்தேரோட்டத்தை முன்னிட்டு, தேர் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், கனமழை தொடர்ந்து பெய்ததால், தேரோட்டம் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற சந்தேகம் பக்தர்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழை காரணமாக, தேர் முழுவதும் நனைந்து காணப்படுவதாகவும், தேரை வடம் பிடித்து இழுத்து கொண்டு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும், தேரோட்டம் ரத்து செய்யப்பட உள்ளதாகவும், சுவாமி அம்பாளை மட்டும் தேரின் உச்சி பீடத்தில் வைத்து, இறக்கி விட கோவில் நிர்வாகம் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இதனால், பக்தர்கள் அதிருப்தியடைந்தனர்.  இதையடுத்து மழை பெய்யாத சூழலில், தேரோட்டத்தை ரத்து செய்வதா என பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து மழை பெய்யாததால் தேரோட்டம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து  இரவு தங்கமயில் வாகனத்தில் பிரகார உலாவும் அதனைத் தொடர்ந்து கார்த்திகை தீபக் காட்சியும் நடைபெறுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே பெரியகோட்டை சிவகுருநாத சுவாமி கோயில் சிவராத்திரி திருவிழாவில் ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar