Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் ... திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தீர்த்த உற்ஸவம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரமேரூர் முருகர் கோவில் செடி, கொடிகள் வளர்ந்து பாழ்
எழுத்தின் அளவு:
உத்திரமேரூர் முருகர் கோவில் செடி, கொடிகள் வளர்ந்து பாழ்

பதிவு செய்த நாள்

14 டிச
2024
02:12

உத்திரமேரூர்; உத்திரமேரூரில் ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ், பாலசுப்பிரமணியன் கோவில் உள்ளது. உத்திரமேரூர் சுற்றுவட்டாரத்தில் முருகர் கோவில் இல்லாததால், இக்கோவிலுக்கு முருகர் பக்தர்கள் அதிகளவில் வருகை தந்து வழிபடுவது வழக்கம். இந்த கோவிலில் கிழக்கு நோக்கி ஐந்து நிலையிலான ராஜகோபுரமும், வெளிப்பிரகார இடதுபுறம் ஊஞ்சல் மண்டபம், வலதுபுறத்தில் வசந்த மண்டபம், நடுவே பலிபீடம் மற்றும் கொடிமரம் என, அழகிய தோற்றத்துடன் காணப்படுகிறது. கருவறையில் முருகப்பெருமானான பாலசுப்பிரமணியன், 6 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். அவரது முன்புறம் வேலும், சேவல் கொடியும், பாதத்தின் அருகே மயில் வாகனம் உள்ளது.


இத்தலத்தில், முருகனின் இரு துணைவியாரான தெய்வானையும், வள்ளியும் ஒன்றாக வடிவம் கொண்டு, கஜவல்லியாக வீற்றிருப்பது அபூர்வ காட்சியாக உள்ளது. இவ்வாறான சிறப்பு மிக்க இக்கோவிலின் வெளிப்புற வளாகம் பராமரிப்பின்றி மோசமான நிலையில் காணப்படுகிறது. கோவிலை சுற்றி உள்ள நடைபாதை ஓரங்களில் முட்புதர்கள் மண்டியிட்டு காணப்படுகிறது. கோவில் அருகே மண்டபம் புதர் சூழ்ந்துள்ளது. கோவிலை சுற்றி உள்ள செடி, கொடிகளை அகற்றாததால், விஷ ஜந்துக்கள் நடமாட்டம் உள்ளது. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம்சுளிக்கின்றனர். எனவே, கோவில் வளாகத்தை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி, முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக். 22ல் காப்பு ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி; கும்மிடிப்பூண்டி பிரசன்ன வெங்கடேச பெருமாள், கருட வாகனத்தில் வீதியுலா சென்று ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் உள்ள சித்தர் இடைக்காடர் கோயிலில் நடைபெற்ற ஜெயந்தி ... மேலும்
 
temple news
திருப்பதி; ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்குப் பிறகு வரும் சதுர்த்தி தினம் நகுல சதுர்த்தியாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் கூவானை ஐயனார் கோயில் புரவி எடுப்பு திருவிழா நடந்தது.மதுரை மாவட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar