Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பம்பையில் பக்தர்கள் தாகம் தணிக்கும் ... சபரிமலையில் புதிய பஸ்ம குளம் தேவசம்போர்டு தீவிரம் சபரிமலையில் புதிய பஸ்ம குளம் ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
ஒரு வழிப்பாதை அமல் : சபரிமலை பக்தர்கள் செல்ல வேண்டிய பாதை எது?
எழுத்தின் அளவு:
ஒரு வழிப்பாதை அமல் : சபரிமலை பக்தர்கள் செல்ல வேண்டிய பாதை எது?

பதிவு செய்த நாள்

19 டிச
2024
12:12

கம்பம்; சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் கம்பமெட்டு சென்றபின் சபரிமலை செல்ல பல பாதைகள் உள்ளன. எந்தெந்த பாதைகள் வழியாக செல்லலாம் என்று கேரள அதிகாரிகள் கூறியதாவது :


ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் தேதி துளசி மாலை அணிந்து விரதம் இருந்து சபரிமலைக்கு பக்தர்கள் செல்வது வழக்கம். தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி உள்ளிட்ட இந்தியா முழுவதும் இருந்து பக்தர்கள் செல்வார்கள். கார்த்திகை, மார்கழி, தை மாதம் என 3 மாதங்களுக்கு லட்சக்கணக்கில் பக்தர்கள் சென்று வருகின்றனர். சபரிமலைக்கு செல்ல நாகர்கோயில், செங்கோட்டை, பொள்ளாச்சி என பல வழிகள் இருந்தாலும், பெரும்பாலான பக்தர்கள் தேனி, கம்பம், குமுளி வழியாக செல்வது வழக்கம். குமுளி மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே ஒருவழிப்பாதை திட்டம் அமுல்படுத்தப்பட்டது. அதன்படி கோயிலிற்கு செல்லும் வாகனங்கள் கம்பத்திலிருந்து திருப்பிவிடப்பட்டு கம்பமெட்டு, சேத்து குழி, ஆமையாறு, புளியன் மலை, கட்டப்பனை, ஏலப்பாறை, குட்டிக்கானம், எருமேலி வழியாக கோயிலிற்கு சென்று வந்தனர்.


இந்தாண்டு நேற்று முன்தினம் முதல் தேனி மாவட்ட நிர்வாகம் கம்பமெட்டு ரோட்டில் ஒருவழிப்பாதையாக அறிவித்துள்ளது. பக்தர்களின் வாகனங்களும் திருப்பி விடப்படுகிறது. கம்பமெட்டு ரோட்டில் செல்லும் பக்தர்களின் வாகனங்கள் கம்பமெட்டை தாண்டியபின், பல பாதைகள் இருப்பதால், எந்த பாதையில் செல்வது என தெரியாமல் குழம்புகின்றனர். இது தொடர்பாக கேரள போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டதற்கு அவர்கள் கூறியதாவது: கம்பமெட்டிலிருந்து அந்நியார் தொழு வழியாக புளியன் மலை சென்று , பின் கட்டப்பனை, ஏலப்பாறை, குட்டிக்கானம் எருமேலி செல்லலாம். ஆனால் அந்நியார் தொழு ரோட்டில், பல ரோடுகள் பல இடங்களில் பிரியும். எனவே அந்த ரோட்டை தவிர்த்து விடுவது நல்லது. கம்பமெட்டு, சேத்துகுழி, ஆமையாறு, புளியன் மலை கட்டப்பனை, ஏலப்பாறை வழியாக செல்வது நல்லது. அல்லது கம்பமெட்டு, சேத்துகுழி, ஆமையாறு, புத்தடி, செல்லிமடை பின் குமுளி சென்று வழக்கம்போல வண்டிப் பெரியாறு, பீர்மேடு, குட்டிக்கானம், எருமேலி செல்லலாம்" இவ்வாறு கூறியுள்ளனர். கம்பமெட்டு ரோட்டில் செல்லும் சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு, கம்பமெட்டில் இருந்து எவ்வாறு செல்ல வேண்டும் என்பதை விளக்கும் பாதை வரைபடம் பிரிண்ட் செய்து, துண்டு பிரசுரங்களை விநியோகம் செய்வது கட்டாயம். இந்த விஷயத்தில் கலெக்டர் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை படம் வரும்): சபரிமலை: பொன்னம்பலமேட்டில் மூன்று முறை தெரிந்த மகரஜோதியையும்,மகர ... மேலும்
 
temple news
சபரிமலை; மகரஜோதிக்கு முந்தைய நாள் வரை நடப்பு சீசனில் 52 லட்சம் பக்தர்கள் வந்துள்ளதாகவும் 430 கோடி ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம் நடக்கிறது. மதியத்துக்கு பின்னர் மகர சங்கரம பூஜையும், ... மேலும்
 
temple news
மூணாறு:  சபரிமலையில் மகரஜோதியை தரிசிப்பதற்கு புல்மேட்டில் பக்தர்களுக்கு அனைத்து துறை சார்பில் ... மேலும்
 
temple news
சபரிமலை: பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் சரண கோஷம் முழங்க பந்தளத்தில் இருந்து திருவாபரன பவனி நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar