Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி ஒளிலாயம் சித்தர் பீடத்தில் ... ஆஞ்ஜநேயர் கோயிலில் ஹனுமத் ஜெயந்தி மஹோற்சவ விழா துவக்கம் ஆஞ்ஜநேயர் கோயிலில் ஹனுமத் ஜெயந்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பழநியில் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

29 டிச
2024
06:12

பழநி; பழநி கோயிலுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை, ஞாயிறு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகரித்ததால் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

பழநி கோயிலில் அரையாண்டு தேர்வு விடுமுறை, ஞாயிறு விடுமுறை தினத்தை தினத்தை முன்னிட்டு தரிசனம் செய்ய அதிக அளவில் பக்தர்கள் வருகை புரிந்தனர். வின்ச், ரோப்கார் மூலம் செல்ல பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்தனர். காலையில் வெளிப்பிரகாரத்தில் கோயிலை சுற்றிலும் கட்டண தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். படிப்பாதையில் அலைபேசி சோதனை செய்யும் இடத்தில் பக்தர்கள் அதிகமாக குவிந்தனர். ஐயப்ப, மேல்மருவத்தூர், தைப்பூச பாதயாத்திரை பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. தரிசனம் செய்ய பக்தர்கள் நான்கு மணி நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

வெளிப்பிரகாரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் குடை பிடித்து நின்றிருந்தனர் குழந்தைகள் சிரமம் அடைந்தனர். படிப்பாதையில் பக்தர்கள் குழுவாக நிறுத்தி அனுப்பி வைக்கப்பட்டனர். பழனி கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரி என்.சி.சி., மாணவர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மலைக்கோயிலில் கைக்குழந்தைகளுக்கு பால் இலவசமாக கோயில் நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டது. இந்த வழி தவறிய பக்தர்களை கண்டறிய ஒலிபெருக்கி மூலம் அறிவிப்புகள் வழங்கப்பட்டன. கிரி வீதியில் மேளதாளத்துடன் பக்தர்கள் காவடி எடுத்து அழகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தி வலம் வந்தனர். கிரிவீதியில் போதுமான அளவு இலவச பேட்டரி கார், பஸ் வசதி இல்லாததால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். பாதயாத்திரை பக்தர்களிடம் வடமாநில நபர்களின் குழந்தைகள் யாசகம் கேட்டு தொந்தரவு செய்தனர். பாத விநாயகர் கோயில் அருகே தட்டு வியாபாரிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள ஸ்ரீவாரி கோயிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 20ம் தேதி தீபாவளி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி புரட்டாசி பிரமோற்ஸவ நிறைவை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணை அருகே கிடைத்த அழகிய தீர்த்தங்கரர் சிற்பம் சுமார் 1100 ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி மாதம் மூன்றாவது புதன்கிழமையை  முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜபதி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; பஞ்சவடீயில் நாளை (9ம் தேதி) திருப்பாவாடை உற்சவம் நடக்கிறது.புதுச்சேரி – திண்டிவனம் சாலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar