Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் ... ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் திருவாடுதுறை ஆதீனம் சாமி தரிசனம் ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மருதூர் ராம வரதாகினி மடத்தில் அனுமன் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
மருதூர் ராம வரதாகினி மடத்தில் அனுமன் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

30 டிச
2024
04:12

மயிலாடுதுறை; மருதூர் ராம வரதாகினி மடத்தில் அனுமன் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீன தம்பிரான் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா மருதூர் லட்சுமி நாராயணபுரம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான ராம வரதாகினி மடம் உள்ளது. இங்கு ராமர் சன்னதியில் ஆஞ்சநேய சுவாமி அருள் பாலிக்கிறார். ஆண்டு தோறும் இந்த திருமடத்தில் அனுமன் ஜெயந்தி விழா நடைபெறுவது வழக்கம். மார்கழி மாத மூல நட்சத்திரம் கூடிய அமாவாசை தினமான இன்று அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக நடந்தது. அனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு ராம வரதாகினி மடத்தில் காவேரியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கடத்தில் வைக்கப்பட்டு ஆஞ்சநேயர் மூல மந்திர ஜபம் மற்றும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு பூஜிக்கப்பட்ட புனித நீரைக் கொண்டு ஆஞ்சநேயர் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை அடுத்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. தருமபுரம் ஆதீனம் கட்டளை ஸ்ரீமத் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் நடந்த சிறப்பு யாகம் மற்றும் ஆஞ்சநேய சுவாமிக்கு அபிஷேக ஆராதனை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். முன்னதாக கோ பூஜை, அஸ்வ பூஜை, கஜ பூஜை நடந்தது. முடிவில் நாதஸ்வர வித்வான் விமல்ராஜ், தவில் வித்வான் வெங்கடேசன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மருதூர் சாம்பசிவம் மற்றும் ராஜாபிள்ளை ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொன்னேரி; புரட்டாசியை முன்னிட்டு, தடப்பெரும்பாக்கம் லட்சுமி நாராயண பெருமாளுக்கு திருக்கல்யாண ... மேலும்
 
temple news
பழநி; திண்டுக்கல் மாவட்டம் பழநி திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோயில் அர்த்தமண்டபத்திற்கு ... மேலும்
 
temple news
வால்பாறை; கோவில்களில்  நடந்த சஷ்டி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.வால்பாறை சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
கமுதி; ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு 100 ... மேலும்
 
temple news
பல்லடம்; பல்லடம் அருகே, மழை வேண்டி நூதன வழிபாட்டில் ஈடுபட்ட கிராம மக்கள், தேசிங்கு ராஜா- பஞ்ச ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar