ஸ்ரீசைலம், காசி ஆகிய இரு திருத்தலங்களில்தான் ஜோதி லிங்கமும் தேவியும் ஒன்றாகத் தரிசனம் தருகின்றனர். வில்வ மரங்கள் சூழ, ஸ்ரீசக்கர வடிவமாக உள்ள மலை நடுவே கோயில் அமைந்திருப்பதால்தான் ஸ்ரீசைலத்துக்கு அந்தப் பெயர் வந்தது. மகா சர்ப்பமாக ஆதிசேஷனே சுருண்டு கிழக்கு மலைத்தொடராகப்படுத்திருக்கிறார். ஆதிசேஷனின் தலை - திருப்பதி; உடல் பகுதி - அஹோபிலம்; வால் பகுதி - ஸ்ரீசைலம் எனத் திகழ்வதாக ஐதீகம். இங்கு பக்தர்களே இறைவனுக்கு அபிஷேகம் செய்யலாம்.