Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புதுச்சேரி சாரதாம்பாள் கோவிலில் ... மணக்குள விநாயகர் கோவிலில் புத்தாண்டு தரிசனம்; பக்தர்கள் குவிந்தனர் மணக்குள விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆங்கில புத்தாண்டு ; ஆட்டம், பாட்டத்துடன் கோலாகலமாக வரவேற்ற மக்கள்
எழுத்தின் அளவு:
 ஆங்கில புத்தாண்டு ; ஆட்டம், பாட்டத்துடன் கோலாகலமாக வரவேற்ற மக்கள்

பதிவு செய்த நாள்

01 ஜன
2025
10:01

கோவை; கோவையில், ஆங்கில புத்தாண்டு தினத்தை மக்கள், ஆட்டம், பாட்டத்துடன் கோலாகலமாக கொண்டாடி வரவேற்றனர்.

உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டை அனைத்து தரப்பு மக்களும் கோலாகலமாக கொண்டாடினர். கோவையில், நேற்று நள்ளிரவு, பல்வேறு பகுதிகளிலும், மக்கள், ஆங்கில புத்தாண்டை கோலாகலமாக கொண்டாடி வரவேற்றனர். இருப்பினும், கடந்தாண்டு போல, கோவை மாநகராட்சி மற்றும் போலீசார் சார்பில், புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஏதும் நடக்கவில்லை. இரவு, 11:00 மணிக்கு, விபத்துகள் ஏற்படுவதை தடுக்கும் வகையில், மாநகரில் உள்ள அவிநாசி மேம்பாலம், காந்திபுரம், உக்கடம், வடகோவை மேம்பாலங்களை, போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடினர். மாநகரில் வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டத்தில் மக்கள் கூடியிருக்கும் இடங்களில், பல்வேறு இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. போலீசார், பல்வேறு இடங்களில், வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

இருப்பினும், நள்ளிரவு நெருங்குவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பிலிருந்து, இளைஞர்கள் பட்டாளம், பைக்குகள் மற்றும் கார்களில் அதிவேகத்தில் சீறிப்பாய்ந்தனர். கோவை மாநகரில், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில், ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். குடும்பத்துடனும், நண்பர்களுடன் ஏராளமானோர் கலந்து கொண்டதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரோஸ்கோர்ஸ் நடைபாதையில், பலூன்கள் மற்றும் வண்ண விளக்கு கிரீடங்கள் விற்பனை செய்யும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டிருந்தது. கொண்டாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வண்ண விளக்கு கிரீடங்கள் அணிந்தும், வண்ண வண்ண பலூன்களை ஏந்தியும் இருந்ததால், அப்பகுதி முழுவதும் வண்ணமயமாக இருந்தது. ஆங்கில புத்தாண்டு துவங்கியதும், அனைவரும் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அனைத்து சர்ச்களிலும் புத்தாண்டு தினத்தையொட்டி, சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது. கோவையின் முக்கிய பகுதிகளில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வாகன சோதனையின்போது, மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டிவந்தவர்களை பிடித்து, போலீசார் அறிவுரை வழங்கினர். கடந்த காலங்களை ஒப்பிடும்போது, இந்தாண்டு, அமைதியாகவே புத்தாண்டு துவங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar